
இலங்கைக்கு தெற்கு ஆழ்கடல் பகுதியில் பெருமளவிலான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படை, சிறிலங்கா பொலிஸ் மற்றும் ஏனைய புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.