
ஐக்கிய இராச்சிய சாரணர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு முகாமில் கலந்து கொண்ட இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட சாரணர் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி .ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது.
இதன்படி, ஷாலினி பெரேரா, அரித பண்டார, அசெல் பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய நான்கு இளம் சாரணர்கள் முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உலகளாவிய காலநிலை நெருக்கடி உள்ளிட்ட தேசிய மற்றும் உலகளாவிய நலன்களில் தீவிரமாக ஈடுபடுமாறு சாரணர்களை ஊக்குவித்தார்.
மேலும், நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதோடு குறித்த நிகழ்வானது இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி பெசரித் பெர்னாண்டோ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.