75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் காலை வேளையில் நடைபெற்றிருந்தது இவ்வைபவத்திற்கு முன்னதாக சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மகாமான்ய டி.எஸ்.சேனநாயக்கவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் ஸ்ரீலங்காபீமன்ய ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகளின் பதவியேற்புடன் சுதந்திர தின நிகழ்வுகளின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியாத்தியதோடு அமைச்சுச் செயலாளர்கள், அமைச்சர்கள், ஏனையவர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் வருகை தந்தனர்.
அதன் பின்னர், 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் தினேஷ் குணவர்தன, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, திருமண மேளம் முழங்க ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.
அதன் பின் ஜெயமங்கல முழக்கப்படடதோடு உயிர்நீத்த அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் வகையில் 02 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முப்படைகளின் பதக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது,
மேலும், அதனைத் தொடர்ந்து முப்படை வீரர்கள், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் துறையினர், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 6,385 பேர் பங்கேற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.
அத்தோடு, முப்படைகளின் 390 கவச வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன. காலி முகத்திடலிற்கு மேல் வானில் விமானப்படை வீரர்கள் மற்றும் காலி முகத்திடலின் கடலில் கடற்படை கப்பல்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அதன்பின் பாராசூட் நிகழ்வும் நடைபெற்றதோடு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதையடுத்து, சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.