சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்டத்தில் வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஹர்த்தால் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்திலும் கறுப்புக்கொடி கட்டப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று கவனயீர்ப்புப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு வரை பேரணியாகச் செல்வதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.