ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற வைபவத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் யாழ்.நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து. சந்தேகநபர்கள் தலா 03 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்கள் மீண்டும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டால் பிணை நிபந்தனைகள் ரத்து செய்யப்படும் என நீதவான் அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.