பொரளை, சஹஸ்புர பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் 25 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போதே அருகில் இருந்த குறித்த பெண் சுடப்பட்டதாக தெரியவந்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொரளை பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொள்வார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.