உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால் அதற்கான பணத்தை வழங்கத் தயார் என பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தலுக்கு பணப்பற்றாக்குறை என்ற பிரச்சினையை அரசாங்கம் முன்வைத்து வருவதாகவும், தேர்தலுக்கான பணத்தை ஒதுக்குவதற்கான திட்டங்கள் இந்த வாரத்தில் தயாரிக்கப்படும் எனவும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் உரிமைகளை தடுக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இந்த வாரத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.