மேலும், ஒரு பில்லியன் ரூபா தொகையில் ஒரு பகுதியை வழங்கினால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்களிப்பு தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக 1,100 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதோடு தற்போது திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க அச்சகத்திற்கு 40 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 25 மில்லியன் ரூபாவும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தலின் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், எஞ்சிய பணத்தை தேர்தலின் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை நடைமுறை விடயங்கள் மற்றும் வழங்கக்கூடிய வசதிகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவுக்காக செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ள 8 பில்லியன் ரூபாவில் 1 பில்லியன் ரூபாவை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி அதிகாரிகள் வழங்கினால் வாக்கெடுப்பை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு பில்லியன் ரூபா தொகையில் ஒரு பகுதியை வழங்கினால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வாக்களிப்பு தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக 1,100 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளதோடு தற்போது திறைசேரியிலிருந்து 100 மில்லியன் ரூபா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க அச்சகத்திற்கு 40 மில்லியன் ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 25 மில்லியன் ரூபாவும் திறைசேரியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேர்தலின் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும், எஞ்சிய பணத்தை தேர்தலின் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை நடைமுறை விடயங்கள் மற்றும் வழங்கக்கூடிய வசதிகள் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.