ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில், இலங்கையில் எரிபொருள் விற்பனை 30 முதல் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் அதிழும் குறிப்பாக மண்ணெண்ணெய் விற்பனை மிகவும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
மேலும், லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளதுடான் பெட்ரோல் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது.
அத்தோடு, கடந்த 13 மாதங்களில் இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விற்பனை தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஞாயிறு நள்ளிரவு முதல் செவ்வாய் நள்ளிரவு வரை தேசிய எரிபொருள் அனுமதி QR முறையின் மூலம் எரிபொருள் விநியோகத்தின் வாராந்த புதுப்பிப்பை மாற்றுவதன் மூலம், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய கம்பனி ஆகியவற்றின் விலை மாதாந்தம் சுமார் 300 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கொலன்னாவ, முத்துராஜவெல மற்றும் 11 உள்ளுர் டிப்போக்களின் நேரடி செலவினங்களாக 195 இலட்சம் ரூபாவும் மின்சாரம், நீர், தொடர்பாடல், சுத்திகரிப்பு உள்ளிட்ட மறைமுக செலவுகளான 100 இலட்சம் ரூபாவும் கட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் எதிர்பார்க்கின்றது.