பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மூன்று மாத கால சேவையை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான பிரேரணையை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த நிலையில் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அவர் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.