மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைக்க அந்நாட்டு இராணுவ ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணைக்குழு, கட்சி கலைப்பதாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, மியான்மரில் தேர்தலுக்கான பதிவு காலக்கெடுவை சந்திக்கத் தவறிய 40 அரசியல் கட்சிகளில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக்க்கும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு மியான்மர் இராணுவ ஆட்சி அரசியல் கட்சிகளுக்கு புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் அளித்ததுள்ளதாகவும் இராணுவத்தினால் நடத்தப்படும் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்று மியான்மரில் உள்ள அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் அத்தகைய தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது,