37,500 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளது என வலுசக்தி அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
அத்துடன் தலா 20,000 மெற்றிக் டன் டீசலினையும், விமானத்திற்கான எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்றே நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 30,000 மெற்றிக் டன் எரிபொருளினை கொண்ட கப்பல் ஒன்றே இன்று அல்லது நாளை நாட்டை வந்தடையும்.
இதற்கமையவே எதிர்வரும் நாட்களில் எரிபொருளிர்க்கான தட்டுப்பாட்டினை குறைக்க முடியும் என வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.