மொரட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சந்தேகநபர் நேற்று மாலை எகொட உயன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் தனது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு 2 சிம்கட்டுக்கள் வாங்கி கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் பயன்படுத்திய 2 செல்போன்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்து ஆதாரமாக முன்வைத்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.