வணிக நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 11% – 12% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
விவசாயம், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக சமூகம், செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும் இந்த திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெற முடியும்.
இலங்கை வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, செலான் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய எட்டு (08) பங்கு நிதி நிறுவனங்களுக்கு 4,900 மில்லியன் ரூபா விநியோகிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (20) பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.