நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை விற்பதற்கு முன் ஆய்வு செய்ய வேண்டும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். அதன் பின்னர் அந்த நிறுவனங்களில் தற்போதுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அப்பிரச்சினைகளை உள்ளூரிலேயே தீர்க்க முடியுமா என ஆராயப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், தீர்க்க முடியாத அரச நிறுவனங்களையே விற்பனை செய்ய வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அந்த அரச நிறுவனங்களை இஷ்டத்துக்கு விற்பனை செய்வதன் மூலம் சாதாரண மக்களும் பாரியளவில் பாதிக்கப்படலாம் என நாம் மேற்கொண்ட விசாரணையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.