நாட்டிற்கு போதுமான பணம் கிடைக்கும் வரை இறக்குமதி தடை அமுல்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், முன்னர் தடைசெய்யப்பட்ட சில பொருட்களின் இறக்குமதித் தடை ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்திற்கொண்டு விசேட இறக்குமதிச் சலுகையை வழங்கும் திறன் தற்போது மிகக் குறைவாகவே காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் பிரேக் பேட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதித் தடை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.