ஊழியர்கள் பற்றாக்குறையால் இன்று காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அந்தவகையில் பிரதான பாதை, கடலோர, களனிவெளி மற்றும் புத்தளம் புகையிரதங்களில் இயக்கப்படவிருந்த பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையால் நேற்று 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. ஊழியர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள குறித்த பிரச்சினை தொடர்பில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
அந்தவகையில், புகையிரத சேவையின் அத்தியாவசிய பிரிவுகளின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்க்கப்படும் வரை சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.