44 நிலைய அதிபர்கள் புதிதாக இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு புகையிரத பணி உதவியாளர் பதவிக்கு தற்போது 3000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆட்சேர்ப்புகளின் மூலம் ஊழியர் பற்றாக்குறையால் புகையிரதங்களை இயக்குவதில் இருந்த தடைகள் ஓரளவுக்கு தணியும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, புகையிரத சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் கடுமையான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் ஒன்றியம் முன்னதாக அறிவித்திருந்தபோதிலும், எதிர்காலத்தில் எவ்வாறு அரசாங்கம் தனது செயற்படும் என்பதை பொறுத்தே தாம் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கஉள்ளோம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஊழியர் பற்றாக்குறை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 03 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் மேலும், நேற்று இரத்து செய்யப்பட்ட புகையிரத பயணங்களின் எண்ணிக்கை 18 எனவும் தெரிவித்துள்ளது.