இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டமோ அல்லது வீதி ஆலோசனையோ இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதார அதிகாரிகளால் திணிக்கப்படாத எந்தவொரு முறைமையும் செல்லுபடியாகாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னமும் செல்லுபடியாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய கோவிட்-19 விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது. இதன்படி, இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்குமாறு சுற்றுலா அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.
மேலும், தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.