எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் அரசாங்கம் தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை துரிதப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதி அமைச்சர் நேற்று தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி விரைவில் இந்த சட்டமூலத்தை இரண்டாவது தடவையாக வாசிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இந்த சட்டமூலத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி இல்லை என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு பின்னர், நாடாளுமன்றத்தில் எழுந்து நின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, முன்னர் ஒப்புக்கொண்டபடி, இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென குறிப்பிட்டார்.