மின்கட்டண அதிகரிப்புடன் நிர்மாணத்துறையின் பல சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், நிர்மாணத்துறையின் பல அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மின் கட்டண உயர்வால் தொழில் துறை அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை முற்றாக அழித்துவிடும் எனவும் இலங்கை ஐக்கிய வர்த்தகர் மன்றத்தின் தலைவர் டானியா எஸ்.அபேசுந்தர தெரிவித்துள்ளார்.