2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 7 மாவட்டங்களில் உள்ள 95,000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை போசாக்கு திட்டத்திற்காக மேலதிக புரத சத்து வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, தாவர எண்ணெய், மஞ்சள் பருப்பு, செம்மண் ஆகியவை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு. இலங்கையில் உள்ள 835 ஆரம்பப் பாடசாலைகளின் மாணவர்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்காக 27.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.