மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும்,செயற்பாட்டாளர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது சுமார் ஒரு கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் முன்வைத்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு, தேஷ்பந்து தென்னகோன் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீதிமன்றில் உதமது பக்க நியாயங்களை முன்வைத்ததுடன், குறித்த மனுவை பரிசீலிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறும் கோரினார்.
இதன்படி, மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கோட்டை நீதவான் சார்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்ரம ஆஜராகி, அதற்கான திகதியை வழங்குமாறும் கோரியுள்ளார்.
மேலும், முன்வைக்கப்பட்ட விடையங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.