முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களின் அடிப்படையில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவினை நீக்கி குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு, குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, நீதிமன்றில் முன்னிலையாகி தங்கள் பக்க நியாயங்களை நீதிமன்றில் முன்வைத்தார்.
இதன்படி, இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறையில் இல்லை என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.