அமுல்படுத்தப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அமர்வினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.