சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் பெறுமதியானது எனவும் அந்நிய செலாவணியை கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கத்திற்கு ரூபாவில் செலவிடுவதற்கும் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடன் வசதி, கொடுப்பனவு சமநிலைப் பற்றாக்குறையை ஈடுசெய்ய மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ப்ளூம்பெர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதோடு இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.