உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக. அதன்படி இன்று காலை 10 மணிக்கு செயலாளர்கள் வர வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளுராட்சி நிறுவனங்கள் தொடர்பில் சட்டத்திற்கு புறம்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பதவிக்காலம் முடிவடைந்த உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்களை உரிய அதிகாரிகளாக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளதோடு அவ்வாறு செய்தால் தேர்தலுக்காக செலவிடப்படும் பணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.