காலி முகத்திடல் கலவரம் சம்பந்தமாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை சந்தேக நபராக கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ.மரிக்கார் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.