மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டின் எரிபொருள் சந்தையில் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்கா நிறுவனமான ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்நாட்டின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது பெற்றோலியம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் விற்பனை பிரதிநிதிகள் மூலம் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒவ்வொரு புதிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும் என்றும் மேலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 20 வருட காலத்திற்கு இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பெற்றோலிய ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.