இஸ்ரேல் அரசுக்கு எதிரான நாட்டின் வீதிகள் தேசியக் கொடியை ஏந்தியவாறு போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், நாடு முழுவதும் பாரிய வேலை நிறுத்தம் நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த நீதித்துறை சீர்திருத்தங்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை பிரதமர் பதவி நீக்கம் செய்ததன் காரணமாக போராட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு போராட்டக்காரர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்ததே அவரது பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உத்தேச நீதித்துறை சீர்திருத்தங்களால் ஜனநாயகம் குழிபறிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருந்த நிலையில், குறித்த உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக, டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலின் இரண்டு பிரதான துறைமுகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், உலகளாவிய சூப்பர் உணவக சங்கிலியும் அதன் இஸ்ரேலிய கிளைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.