இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை 6,600 லீற்றர் கொண்ட 208 டேங்கர்கள் டெர்மினல்கள் மற்றும் டிப்போக்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான இருபது ஊழியர்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.