நீதிமன்றத்தை அவமதித்ததாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும், குறித்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தம்பக்க நியாயங்களை முன்வைத்ததுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியிருந்த நிலையில் கோரிக்கையை அனுமதித்த ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி பரிசீலிப்பதற்கு திகதியை நிர்ணயித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி,சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தேசிய ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.