இன்று பிற்பகல் 1.02 மணிக்கு பேருவளை கடலில் 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடலில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
மேலும், பேருவளை, களுத்துறை, கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இதனால் எந்தவித ஆபத்துக்களும் இல்லை எனவும் அதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.