ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்றிரவு மிரிஹானவில் இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
போராட்டத்தின் போது இடம்பெற்ற பல போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் பதிலளிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையன்றும் மிரிஹான ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும்.
நேற்றைய போராட்டத்தை தொடர்ந்து வாகனங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம் 39 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருப்பதாகவும். மொத்தமாக 53 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 18 STF வீரர்கள் உட்பட 24 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும். மோதல்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றஞ்சாட்டப்பட மாட்டாது, மாறாக, தண்டனைச் சட்டம் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட இருப்பதுவும் குறிப்பிட்டுள்ளார்.