அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்கள்.
இதில் தம்மை தனியான சுயேச்சைக் குழுவாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இன்றைய கலந்துரையாடல் நடைபெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இக்குழுவை எதிர்க்கட்சியில் அமர அனுமதிக்குமாறு எம்.பி.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினுடைய (SLPP) 12 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய (SLFP) 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் (SLFP) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினுடைய 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
113 ஆசனங்களினை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் பெறுகின்ற எந்தவொரு குழுவும் அரசாங்கத்தினை அமைப்பதற்கான அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்ததை தொடர்ந்து தாம், சுயாதீனமாகச் செயற்படுவதற்கான முடிவினை எடுத்ததாக பெறுகின்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கான எதிராக தற்போது பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருவதை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.