தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு முன்னர் தேவையான சூழலை உள்ளூராட்சி அதிகாரிகள் தயாரித்திருக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு முன்னதாகவே தேர்தலுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, உள்ளூராட்சி மன்றங்களின் வாக்கெடுப்பை எந்த அரச அதிகாரிகளும் ஒத்திவைக்க மாட்டார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்துள்ளார்.