சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை கலைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (24) சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் சேவையை பாராட்டும் வகையில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், 2015ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் சிவில் பாதுகாப்பு சேவையானது காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த காலம் முடிவடைந்துள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன்படி, சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் 60 வருட சேவையில் ஈடுபடுவதற்கு 55 வருடங்களுக்கு மேல் சேவை நீடிப்பு கோர முடியும் எனவும், எதிர்காலத்திலும் அந்த செயற்பாடுகளை மாற்றுவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.