நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், காவல்துறையினரை பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லும் போது உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் தொடர் வழிகாட்டுதல்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அண்மையில் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும் அந்த உத்தரவின்படி பொலிஸ் மா அதிபர் செயற்படாததைக் கருத்தில் கொண்டு எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், அச்சலா வெங்கப்புலி ஆகிய 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு, 2008ஆம் ஆண்டு கொம்பஞ்சாவீதி பொலிஸாரின் பிடியில் இருந்த முகமது இர்பான் என்ற சந்தேக நபரை விசாரணைக்காக வெளியே அழைத்துச் சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,மேற் குறிப்பிட்ட உத்தரவினை வழங்கி இருந்தமை முக்கியமான விடையமாகும்.