முதலாம் தரத்தில் பயிலும் அனைத்து பிள்ளைகளுக்கும் வகுப்பறையில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறை இன்று (30) முதல் ஆரம்பமானது.
மேலும், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றுதலுடன் நுகேகொட சமுத்திராதேவி மகளிர் ஆரம்பப் பாடசாலையில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட்து.
இதன்பாடிய, பாடசாலைக்கு வந்த முதல் நாள் முதல் வகுப்பறையில் மாணவர்களுக்கு எந்த வித குழப்பமும், பதட்டமும் இல்லாமல் நடைமுறை பேச்சுப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கு தேவையான சுமார் 13,800 முதன்மை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.