இலங்கையை முன்னேற்றுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து அடுத்த தலைமுறைக்கு வளமான நாட்டை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“பொருளாதார உரையாடல் – சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு அப்பால்” என்ற மாநாட்டில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதார பிரச்சினையில் இருந்து பிரிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் பெட்ரோலியம் நிறுவனத்தை சட்டப்பூர்வமாக்கியதினால் ஏற்கனவே நாட்டின் வளங்களை அதிகமாக வீணடித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். .
அத்தோடு,ஏழை, எளிய மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவையே தவிர, இலங்கை மின்சார சபைக்கு அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.