கடுவெல பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் குடியிருப்புக்கான வாடகைக் கொடுப்பனவுகளை செலுத்த தவறியதாக கடுவெல பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சென்ற 10 மாதங்களாக வாடகைப் பணத்தினை செலுத்த தவறியுள்ளதாக பொலிஸ் நிலையம் அமைந்திருக்கின்ற கட்டிடத்தினுடைய உரிமையாளர் தெரிவித்தார்.
தற்போது கடுவெல பொலிஸார் 2 மில்லியன் ரூபாய்களை செலுத்தவேண்டிய இதேவேளை, கடுவெல பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிடமாக ஒதுக்கப்பட்டுள்ள வீடொன்றின் உரிமையாளர், வாடகைக் கொடுப்பனவுகளை பொலிஸார் செலுத்தத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 09 மாதங்களாக பொலிஸ் நிலையம் நிலுவையிலுள்ள வாடகைக் கொடுப்பனவுகளை செலுத்தவில்லை என அந்த நபர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொலிஸ் நிலையத்தில் இரண்டு பகுதிகளாக ஒப்படைக்கப்பட்ட முழு கட்டிடத்திற்கான செலவை மதிப்பிடுமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பிட்ட விடையம் தொடர்பாக திறைசேரியினுடைய மதிப்பீட்டினைத் தொடர்ந்து,செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளினை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.