நூருள் ஹுதா உமர்
இலங்கையின் அரசாங்கம் நாடு முழுவதும் அவசரகால நிலையினை பிரகடனப்படுத்தியுள்ள காரணத்தினால் நேற்று மாலை முதல் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள் ஊரடங்குச் சட்டத்தை அனுசரித்து வருகின்றார்கள்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான கல்முனை,காரைதீவு மற்றும் சாய்ந்தமருது,நிந்தவூர் சம்மாந்துறை,அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டுகின்றது.
ஆனாலும் இன்று சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் டீசல் கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கொண்டு இருந்ததினையும் அவதானிக்கக் கூடியதாக காணப்பட்டது.