ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி 24 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் தம்மிக்க பிரசாத்துக்கு ஆதரவாக அர்ஜூன ரணதுங்க மற்றும் சிதத் வெத்தமுனியுடன் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் காலி முகத்திடல் மைதானத்திற்கு வந்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி கிடைக்குமாறு நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி 24 மணித்தியால உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக்க பிரசாத் நியூஸ்வைருக்கு தெரிவித்தார்.