நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கத்தினை பதவி விலகுமாறு கோரி நாட்டின் பல பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ் நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க் கட்சியால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்படவுள்ள நிலையில் சீனா தூதர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் சீனா தூதுவரான குய் சென் ஹாங் இலங்கை பொதுஜான பெரமுனாவின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.