வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு உடனடியாக வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்காமல் அவர்களின் மனித உரிமைகளும் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.