மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று நடத்தப்படவிருந்த தொடர் போராட்டத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே தமது தொழிற்சங்க கூட்டமைப்பும் தொடர் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்..
அத்தோடு, மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான கலந்துரையாடல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.