போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கஞ்சிபான இம்ரான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதற்கு பின்னல் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என்பது நாட்டின் புலனாய்வு அமைப்பிற்க்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சத்தத்தோடு, கஞ்சிபான இம்ரான் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும்,அவதானமாக இருக்குமாறு தமிழக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.