கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் கூட்டு முயற்சியாக குறுகிய கால விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தென்கொரியாவில் உள்ள சீனா தூதரகம் மற்றும் துணை தூதரகம் ஆகியவை தென்கொரியர்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், சீனா பிரஜைகளுக்கு தென் கொரியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதை ஒப்பிடுகையில், விசா வழங்குவதையும் அவர்கள் யதார்த்தமாக்குவார்கள் என்று சீனா தெரிவித்துள்ளதோடு ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சீனாத் தூதரகமும் ஜப்பானிய குடிமக்களுக்கு குறுகிய கால விசா வழங்குவதைத் தடை செய்துள்ளதாகவும் ஆனால் அதற்க்கான காரணத்தினை குறிப்பிட்ட தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.