உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கல்முனை மாநகர சபையினுடைய சார்பில் வேட்புமனுக்களினை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தி உயர் நீதி மன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவினை வழக்கு விசாரணை முடியும் வரை நீடிப்பதாக உயர் நீதிமன்றத்தினால் இன்று (19) தீர்ப்பளித்தது.
மேலும், சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த, அரச சேவை ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் ஏ. எல். எம். சலீம் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தினுடைய பிரதிநிதியானா ஏ. ஆர். எம். அசீம் என்பவர்களினால் தாக்கல் செய்த குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இவ்வுத்தரவினை விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், மனுவை மார்ச் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,