இந்தியா வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும், இந்தியா வெளிவிவகார அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகளும் வந்துள்ளதாக உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்த இந்தக் குழுவினர் இன்று பிற்பகல் 02.45 மணியளவில் இந்தியாவுக்குச் சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் இந்தியா வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினரை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.